6.4 தொகுப்புரை

ஏகோஜியை முதலாகக் கொண்ட மராட்டிய மன்னர்கள் செய்த போர்கள், அறப்பணிகள் ஆகியவற்றைப் படித்து விளங்கியிருப்பீர்கள். மராட்டிய மன்னர்கள் ஆங்கிலேயர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை அறிந்திருப்பீர்கள். மராட்டிய மன்னர்களில் இரண்டாம் சரபோஜி கலையரசராகத் திகழ்ந்தார் என்பதை விரிவாக அறிந்து கொண்டிருப்பீர்கள்.

மராட்டியர் ஆட்சிமுறை எவ்வாறு இருந்தது என்பதை விளக்கமாக அறிந்து கொண்டிருப்பீர்கள். மராட்டியர் ஆட்சியில் நாட்டுப்பிரிவுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதைப் பற்றியும், அரசு அலுவலர், உழவர்கள் ஆகியோர் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றியும், வாணிகம் எவ்வாறு நடைபெற்றது என்பதைப் பற்றியும் நன்கு படித்து அறிந்து கொண்டிருப்பீர்கள். மேலும் மராட்டியர் ஆட்சியின்போது சமயநிலை, தமிழ்மொழியின் நிலை ஆகியவை எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றியும் படித்துத் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
தஞ்சை மராட்டிய நாட்டின் வடக்கு எல்லையாக அமைந்தது எது?
2.
நிருவாக வசதிக்காக மராட்டியர் தங்களது நாட்டை எத்தனை பகுதிகளாகப் பிரித்து ஆட்சி புரிந்தனர்?
3.
ஐந்து சுபாக்கள் என்பன யாவை?
4.
சர்க்கேல், கொத்தவால் – விளக்குக.
5.
ஏகோஜியின் காலத்தில் நிலத்தை அளக்கப் பயன்பட்ட அடிக்கோல் எவ்வளவு நீளமுடையது?
6.
நாணயம் உருவாக்கும் இடம் எவ்வாறு கூறப்பட்டது?
7.
மராட்டியர் காலத்தில் எந்தச் சமயம் மிகச் சிறப்புடன் செழித்தோங்கியது?
8.
மராட்டியர் காலத் தமிழில் நகரம் எவ்வாறு எழுதப்பட்டது? ஒரு சான்று தருக.
9.
மராட்டியர் காலத் தமிழில் ‘இந்த’ என்பது எவ்வாறு எழுதப்பட்டது?