தமிழகத்தில் கி.பி.19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது
சமூகநிலை, கல்வி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, சமயம் ஆகியன எவ்வாறு
இருந்தன என்பதைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
ஆங்கிலேயர் ஆட்சியின்போது தமிழகத்தில் மக்களின் நிலை
எவ்வாறு இருந்தது என்று புரிந்து கொள்ளலாம்.
மக்களிடையே பல குலப்பிரிவுகள் இருந்தமையை அறிந்து
கொள்ளலாம்.
கல்வி, இலக்கியம் போன்றவை எவ்வாறு வளர்ச்சி பெறலாயின
என்று தெரிந்து கொள்ளலாம்.
சமயநிலை எவ்வாறு இருந்து வந்தது என்பதனை அறிந்து
கொள்ளலாம்.