பாடம் - 1

A04111 தொல்காப்பியர் காலம்


E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் தமிழின் தொன்மையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. தமிழ்ச் சங்கங்கள் இருந்தது பற்றிய செய்திகளைக் கூறுகிறது. அகத்தியரைப் பற்றியும், அகத்திய சூத்திரங்கள் பற்றியும் எடுத்துரைக்கிறது.

இறுதியாகத் தொல்காப்பியரைப் பற்றியும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவை பற்றியும் கூறுகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழின் தொன்மைச் சிறப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
  • அகத்தியரைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
  • தொல்காப்பியரைப் பற்றியும், தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு