பாடம் - 3


A04113 சங்கம் மருவிய காலம்

(கி.பி. 300 - 600)


E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம், சங்கம் மருவிய காலப் பகுதியில் (கி.பி. 300 - 600) தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு என்ற தொகுதியில் அடங்கும் 18 நூல்கள் பற்றிக் கூறுகின்றது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழக வரலாற்றில் இருண்டகாலம் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

  • பதினெண்கீழ்க்கணக்கு என்ற தொகுதியில் அடங்கும் நூல்களின் பெயர்களையும், அவற்றின் ஆசிரியர்கள் வரலாறுகளையும் அறியலாம்.

  • பதினெண்கீழ்க்கணக்கு என்ற பெயரின் வரலாற்றை அறியலாம்.

  • இத்தொகுதியில் அடங்கும் நூல் ஒவ்வொன்றின் அமைப்பு, சிறப்பு முதலியவற்றை அறியலாம்.

  • இந்நூல்களில் இடம்பெறும் நல்ல கருத்து, கற்பனைச் சிறப்பு, உவமை நயம், மொழிநடை ஆகியவற்றை அறியலாம்.


பாட அமைப்பு