இது
சைவ சமய முன்னோடிகளான திருமூலர், காரைக்கால் அம்மையார் ஆகியோரில்
திருமூலரின் வரலாற்றையும் படைப்பையும் பற்றிக் கூறுகிறது.
அதே காலப் பகுதியில் தோன்றிய வேறு சில
நூல்களைப் பற்றியும் சொல்கின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
திருமூலரின் வரலாற்றை அறியலாம்.
திருமூலர் இயற்றிய திருமந்திரத்தின்
அமைப்பு, அதன் செல்வாக்கு, அது தமிழ் ஆகமத்தினைப் பின்பற்றி
எழுந்த சாத்திரம் என்ற உண்மை, அது கூறும் உயர்ந்த கருத்துகள்
ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
முத்தொள்ளாயிரம் என்ற நூலின் வரலாற்றையும்,
நயத்தினையும் தெரிந்து கொள்ளலாம்.