பாடம் - 2

A04112 சங்க இலக்கியக் காலம்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் தமிழிலுள்ள மிகத் தொன்மையான
இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பவை
பற்றி விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • சங்க காலம் இன்னது என்று அறியலாம்.
  • சங்கப் பாக்கள் பற்றியும் அவற்றைப் பாடிய புலவர்
    எண்ணிக்கையையும் அவை அகம், புறம் என்ற
    பகுப்பில் அடங்குவதனையும் அறியலாம்.
  • சங்கப் பாடல்கள் தொகுக்கப்பட்ட முறையை
    அறியலாம்.
  • பாடல்களைத் தொகுத்தோர் தொகுப்பித்தோர் பற்றி
    அறிந்து கொள்ளலாம்.
  • எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற தொகுதிகளுள்
    அடங்கும் நூல்களைப் பற்றித் தனித்தனியே
    அறியலாம்.
  • சங்க இலக்கியங்கள் காட்டும் பண்டைத் தமிழ்
    நாகரிகத்தை உணரலாம்.

பாட அமைப்பு