பாடம் - 6

A04116 முதல் ஆழ்வார்கள் காலம்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் வைணவ சமய முன்னோடிகளான
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய
மூவரின் வரலாறு பற்றியும் நூல்கள் பற்றியும்
சொல்லுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • ஆழ்வார் என்ற சொல்லின் பொருளை அறியலாம்.
  • பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களை அறியலாம்.
  • மூன்று ஆழ்வார்களும் பிறந்த ஊர், இடம், பிறந்த
    நாள் பற்றி அறியலாம்.
  • மூவரும் பாடிய நூல்களின் பெயர்களை அறியலாம்.
  • மூவரையும் திருமால் ஆட்கொண்டு அருள்புரிந்த
    வரலாற்றை அறியலாம்.
  • திருமால் மீது ஆழ்வார்கள் கொண்ட பேரன்பு,
    திருமால் வழிபடும் முறை, திருமால் வழிபடுவார்
    பெறும் பேறு, திருமால் எல்லாம் ஆகி நின்று
    உலகை வாழ்விக்கும் சிறப்பு முதலிய பலவற்றையும்
    அறியலாம்.

பாட அமைப்பு