பல்லவ மன்னர்களின் தீவிரச்
சமயப் பற்றும், கோயில் பணியும்,
கொடைகளும், மக்கள் அடியவரை ஆதரிக்கத் தூண்டின. சைவ,
வைணவ இலக்கியங்கள் உருப்பெற்றன. அவை
மக்களால்
படிக்கப்பட்டன; கோயில், கூட்டுவழிபாடுகளில் பாடப்பட்டன. சமண
சமயத்தில் பெருங்கதை எனும் மொழிபெயர்ப்பு நூலும், மேரு மந்தர
புராணம் எனும் புராண நூலும் மட்டுமே இக்காலத்து எழுந்தன.
முத்தரையரைப் புகழும் தனிப்பாடல்கள் கிடைத்துள்ளன. உரைநூல்,
அகப்பொருள் நூல் போன்ற பிற நூல்களும் தோன்றின.
|