பாடம் - 4

A04124 ஒன்பதாம் நூற்றாண்டு - I

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

ஒன்பதாம் நூற்றாண்டின் அரசியல், சமூக, சமயப் பின்புலங்களைப் பற்றிக் கூறுகிறது. அக்காலக்கட்டத்தில் வெளிவந்த சைவ, வைண, புத்த இலக்கியங்களைப் பற்றிக் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

ஒன்பதாம் நூற்றாண்டில் எத்தகைய அரசியல், சமூக, சமயச் சூழல்கள் இருந்தன என்பதை அறிந்து கொள்வீர்கள்.

மாணிக்கவாசகரின் படைப்புகள் - குறிப்பாகத் திருவாசகத்தின் பெருமையைத் தெரிந்து கொள்வீர்கள்.

நம்மாழ்வாரின் பாடல்களின் சிறப்புகளை அறிந்து கொள்வீர்கள்.

பல்லவர்களைப் பற்றி வெளியான படைப்புகளையும் தெரிந்து கொள்வீர்கள்.