5.0 பாட முன்னுரை

ஆழ்ந்து சிந்தித்துத் தரவு (data) அடிப்படையில் எழுதப்படுவது இலக்கணம். ஆழ்ந்த அனுபவம், கற்பனை நயத்துடன் வெளிப்படுத்தப்படுவது இலக்கியம். மொழிக்கு, யாப்பிற்கு, அகவாழ்விற்கு என்று இலக்கண நூல்கள் அணி சேர்க்கின்றன. முறையாக அகரநிரலில் (அகர வரிசையில்) நிகண்டுகள் எழுதப்பட்டது இக்காலகட்டத்துப் புதுவரவு ஆகும்.