6.3 இசைத்தமிழ்
விடுதலைக்குப் பின் குடந்தை ப. சுந்தரேசன்,
எஸ். இராமநாதன், எம்.எம். தண்டபாணி தேசிகர்,
கே.பி. சுந்தராம்பாள், சீர்காழி கோவிந்தராஜன்,
டி.கே.எஸ். கலைவாணன் போன்றோர் இசைப்பணி
ஆற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
சீர்காழி
கோவிந்தராஜன்
|
கே.பி.
சுந்தராம்பாள் |
• குடந்தை. ப. சுந்தரேசனார்
இவர் இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், இசைத்தமிழ்
அகரமுதலி, ஐந்திசைப் பண்கள், இசைத்தமிழ் வரலாறு
முதலியன எழுதியுள்ளார். பஞ்சமரபு எனும் பழைய இசைநூல்
வெளியீட்டில் உதவினார்.
• எஸ். ராமநாதன்
இவர் தமிழிசை பற்றிய கட்டுரைகளைத் தமிழிலும்
ஆங்கிலத்திலும் வெளியிட்டார். வெளிநாட்டு மாணவர்க்குத்
தமிழிசை வகுப்புகள் நடத்தி வந்தார்.
தமிழிசை பற்றிய ஆய்வுகள் நிறைய மேற்கொள்ளப்பட
வேண்டியுள்ளன. தமிழிசை இயக்கம், இசைக் கல்லூரிகள்
என்பன தமிழிசையை வளர்க்கின்றன. இயலிசை நாடகமன்றம்
இசைக் கலைஞர்களைப் போற்றுகிறது. மதுரைத் தமிழ்ச் சங்கம்
அண்மையில் 4 வகை யாழும் அவற்றின் நரம்புகளும்,
திருக்கடைக்காப்பு, யாழ் உறுப்புகள், தமிழிசையும்
இசைத்தமிழும், யாழும் யாழ் முரிப்பண்ணும் என்ற
நூல்களை வெளியிட்டுள்ளது.
|