இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
|
-
தொல்காப்பியர்
காலத் தமிழ்த் தொடர்களில் திணை, பால், எண், இடம் ஆகிய
இயைபுகள் பிழைபடாது அமைந்துள்ளன என்பதனை உணரலாம்.
-
ஆயிரக் கணக்கான
ஆண்டுகளாகத் தமிழ்த் தொடர்களின் இயைபு கெடாமல் நீடித்து
வருவதற்குத் தொல்காப்பிய இலக்கணமே காரணம் என்பதைப்
புரிந்து கொள்ளலாம்.
-
நெகிழ்ச்சியான
தொடர் அமைப்புக் காரணமாக, சொல் வரிசையில் மாற்றம்
செய்தாலும் பொருள் மாறாதிருக்கும் தமிழ்மொழியின் இயல்பைப்
புரிந்து கொள்ளலாம்.
-
அடைமொழிகள்,
இயற்பெயர், சிறப்புப்பெயர் போன்றவை தொடர்களில் அமையும்
முறைகள் தொல்காப்பியர் காலத்திலேயே தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்ததை
உணரலாம்.
-
தொடரில் பொருள்
மயக்கம் நேரும் சூழ்நிலைகளில் அம்மயக்கத்தைத் தவிர்க்கும்
முறைகள் பற்றித் தொல்காப்பியர் கூறியுள்ளவற்றை அறிந்து
கொள்ளலாம்.
|
|
|