சங்ககாலத் தமிழ் தொல்காப்பியர் காலத் தமிழிலிருந்து
பெரும்பாலும் மாறுபடாமலிருப்பதைக் கூறுகிறது.
மொழிமுதலில் வரும்
எழுத்துகள் மொழி இறுதியில்
வரும் எழுத்துகள், ஒலிமாற்றங்கள் போன்றவற்றில் சிறுசிறு
மாற்றங்களே நேர்ந்துள்ளன என்பதை எடுத்துக் காட்டுகிறது.
இடப்பெயர்களில்
மிகச்சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை
சுட்டிக் காட்டப்படுகிறது. வினைச்சொற்களில் புதிய சில
விகுதிகள் சேர்ந்துள்ளமை எடுத்துக் காட்டப்படுகிறது.
புதிய சில வினையெச்ச,
பெயரெச்ச வாய்பாடுகள்
சங்ககாலத்தில் தோன்றியமை எடுத்துக் காட்டப்படுகிறது.
|