நண்பர்களே! இதுவரை பல்லவர் காலத் தமிழில்
எழுத்தியல் குறித்துப் பல செய்திகளை அறிந்திருப்பீர்கள்.
இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளைத் தெரிந்து
கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப்
பாருங்கள்.
•
பல்லவர் காலத் தமிழை அறிய உதவும் இலக்கியங்கள்,
இலக்கணம், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற செய்திகளை அறிந்து
கொண்டீர்கள்.
•
அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் மொழியில்
ஏற்பட்ட உயிர் எழுத்து மாற்றங்களையும் உயிரின் ஒலியளவில் ஏற்பட்ட
மாற்றங்களையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
•
பல்லவர் காலத்தில் உயிரெழுத்துகள் மட்டுமன்றி
மெய்யெழுத்துகளும் எத்தகைய மாற்றங்களுக்கு உள்ளாயின என்பதனையும்,
தனி ஆய்தத்தின் தோற்றச் சிறப்பினையும் பல சான்றுகள் மூலம்
நீங்கள் நன்கு உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1
மொழிமுதல் ஙகரம் வருவதாக எந்த இலக்கண நூல் குறிப்பிடுகிறது?