1.7 தொகுப்புரை நண்பர்களே, இப்பாடத்தின் வழி என்னென்ன அறிந்து கொண்டோம் என்பதை ஒருமுறை எண்ணிப் பாருங்கள். பேச்சு மொழி, எழுத்து மொழி இரண்டைப் பற்றியும் அறிந்து கொண்டோம். மூன்று வகையான எழுத்து முறைகளைத் தெரிந்து கொண்டோம். தமிழின் வரிவடிவம் பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் வகைகள் பற்றியும் அறிந்து கொண்டோம். எழுத்துகளில் இயற்கையால் ஏற்பட்ட மாற்றங்களையும், சீர்திருத்தங்களால் விளைந்த மாற்றங்களையும் பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டோம். தமிழ் எழுத்து வடிவங்கள் மாற்றி அமைக்கப்
பெற
வேண்டும் என்பவர்களும் உள்ளனர். தமிழ் மொழியை
அறிவியல் துறையில் இன்னும் விரிவாகப் பயன்படுத்தும்
நோக்கில் ரோமன் எழுத்து வடிவில் எழுதலாம் என்னும்
கருத்து அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களால்
முன்வைக்கப் பெற்றுள்ளது. கு, கூ என்று எழுதும் முறையை
மாற்றி
|