மனித இனம் எவ்வளவு பழமை வாய்ந்ததோ, அந்த
அளவு
பழமை மிக்கது நாட்டுப்புறவியலாகும். இதில் இந்திய
அளவில் எத்தகு நிலையில் நாட்டுப்புறவியல்
விளங்கியது
என்பதைக் காணும் போது, இந்தியாவில் நாட்டுப்புறவியல்
துறை தனித்ததொரு துறையாக வளரவில்லை. ஆனால்
இந்தியவியலின் (Indology) ஒரு பகுதியாகவே கருதப்பட்டது
என்பது அறிஞர் கருத்தாகும்.
இந்திய நாட்டின் பாரம்பரியத்தைக் கூறும் வேதத்தில்,
குறிப்பாக ரிக் வேதத்தில் பழமையான நாட்டுப்புறப் பாடலும்
கதைப்பாடலும் காணப்படுகின்றன.
பஞ்சதந்திரக் கதை
இந்திய நாட்டுப்புற இலக்கியத்தின் தலைமை இடத்தைப்
பெற்றதாகும். புத்த ஜாதகக் கதைகள்
நீதிநெறிக்
கதைகளாகும்.
இந்திய நாட்டின் காஷ்மீர்ப் பகுதி, இமாசலப் பிரதேசம்,
பஞ்சாப், அரியானா, மேற்கு வங்காளம், பீகார், அசாம், ஒரிசா,
மேகாலயா, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், இராஜஸ்தான்,
மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளம்
என்று அனைத்துப் பகுதிகளிலும் நாட்டுப்புறக் கதைகளும்,
நாட்டுப்புறப் பாடல்களும் காணப்பட்டன என்பதை இந்திய
நாட்டுப்புறவியல் வரலாற்றினைப் படிக்கும் பொழுது அறிய
முடிகிறது.
|