|
இந்தப் பாடம் கதைப்பாடல்கள் வகைமையில்
ஒன்றான வரலாற்றுக் கதைப்பாடல் பற்றி எடுத்துரைக்கின்றது.
அவற்றுள் சிறப்பானதாகவும் முதலிடம் பெற்றதாகவும் அறிஞர்களால்
சுட்டப்படும் இரு வரலாற்றுக் கதைப்பாடல்களை அறிமுகப் படுத்துகிறது.
இராமப்பய்யன்
அம்மானை, தேசிங்குராசன் கதை என்ற இரு கதைகளின் சுருக்கம்
எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. கதை இரண்டும் வரலாற்றோடு
ஒப்பிடும் பொழுது எந்த அளவிற்கு மாறுபட்டுள்ளன என்பது
சுட்டப்பட்டுள்ளது. இக் கதைப் பாடல்கள் வாயிலாக அறியவரும்
அக்காலப் பழக்க வழக்கங்கள், மரபுகள், இலக்கிய நயங்கள்
ஆகியனவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
|