தன் மதிப்பீடு : விடைகள் - II

3. சமயோசித புத்தி உள்ள நல்லவன் மட்டுமே வெற்றி பெறுவான் என்ற கருத்து சரியானதா?

நல்லவன் சமயோசிதத்தால் வெற்றி பெறுவான் என்று எழுத்திலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் தவறான செயல்களில் ஈடுபடுபவனும் வெற்றி பெறுவதாக நகைச்சுவைத் துணுக்குகள் உள்ளன. இங்கு அவனுடைய சமயோசிதம் இரசிக்கப்படுகிறது.