9. தமது தந்தையார் இறந்த அவலத்தைப் பாரதியார் எங்ஙனம்
குறிப்பிட்டுள்ளார்?
தந்தை இறந்த பின்னர் தாம் ஓர் அகதி போல் ஆனதை
பாரதியார் பின்வருமாறு பாடியுள்ளார்:
தந்தை போயினன், பாழ்மிடி சூழ்ந்தது;
தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்;
சிந்தையில் தெளிவு இல்லை; உடலினில்
திறனும் இல்லை; உரன்உளத்து இல்லையால்.
எந்த மார்க்கமும் தோற்றிலது என்செய்கேன்?
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?