பாரத விடுதலைப் போரில் பங்கு பெற்று அரிய தியாகங்களைச்
செய்த தலைவர்கள் பலர். அவர்கள் தாய் நாட்டின் மீதுள்ள பற்றினால், அந்நியர்
ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால்
விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல துன்பங்களை பாரதியார் தலைவர்களைப் பற்றிப் பாடியதன் நோக்கம் என்ன? தாய்நாட்டிற்காகத் தொண்டு செய்த தலைவர்களின் தன்னல மற்ற தியாகத்தை இளைய தலைமுறையினர் உணரவும், அதைப் பின்பற்றவுமே அவர்களைப் பற்றிப் பாடுகிறார். 1919-இல் இந்தியாவுக்குத் திரும்பியதும், இந்திய விடுதலைப்
போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டார். இந்திய மக்களை ஒன்று திரட்டி, அமைதியான
வழியில் ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்தினார். 1947-இல்
இந்தியா விடுதலை அடைந்தது. உலகில் பல நாடுகள் வன்முறையினால்,
(தேசியத் தலைவர்கள் - மகாத்மா காந்தி - 5 ) (ஒத்துழையாமை - ஒத்துழைப்புத் தர மறுப்பது (Non co- operation)என்று கூறிக் காந்திஜி கடைப்பிடித்த ஒத்துழையாமை இயக்கத்தைப் பாராட்டுகிறார். இத்தகைய அரிய செயலை - தியாகத்தை, தொண்டைச் செய்த காத்மாவைப் பாரதியார் பலவகையில் பாராட்டுகிறார் (தேசியத் தலைவர்கள் - 1) எம் தலைவராகிய காந்தி அடிகளாரே நீங்கள் வாழ்க! நீடுழி
வாழ்க! இந்த உலகத்திலுள்ள நாடுகளிலே இந்தியா அந்நியருக்கு அடிமையாகித்
தாழ்ந்த நிலையில் இருந்தது. அவ்வாறு பாழாகி இருந்த பாரத தேசத்தை வாழ்விக்க
வந்த காந்தி அடிகளாரே! நீங்கள் வாழ்க! வாழ்க! எனப் பாராட்டுகிறார்
குருகோவிந்தர் சீக்கியர்களின் பத்தாவது குருவாக விளங்கியவர்.
அவர் சீக்கிய மக்களை, சாதி பேதங்களை எல்லாம் கைவிடச் செய்து ஒரே அணியில்
திரட்டினார். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஈடுபட்ட இலக்கிய நெஞ்சினரான
பாரதிக்குக் குரு கோவிந்தரின் வீரவாழ்வும் தியாக வாழ்வும் புதிய எழுச்சி
ஊட்டின. குரு கோவிந்தரின் வீரத்தைப் போற்றுவதன் மூலம் அஞ்சா நெஞ்சமும்
தியாக மனப்பான்மையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று எண்ணினார்
பாரதி. ஆகவே ‘குரு கோவிந்த சிம்ஹ’ என்ற தலைப்பில் ஒரு பாடலை எழுதினார்.
அப் பாடல் குரு
(சோதரர் = சகோதரர், உடன்பிறந்தவர்) என்று கூறுவதாக அமைந்துள்ளது. தன்னலமற்ற பெரியோர்களைப் பற்றிப் பாடுவதன் மூலம் அத்தகைய தலைவர்களின் தலைமையின் கீழ் இந்திய மக்களை ஒன்றுபடச் செய்ய வேண்டும், விடுதலை இயக்கத்தில் முழு மூச்சுடன் ஈடுபட வைக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்.
இந்தியாவில் எந்த மாநிலத் தலைவர்களாக இருந்தாலும் அவர்களை இனம் கண்டு பாராட்டும் பண்புடையவர் பாரதியார். ஏனென்றால் விடுதலை இயக்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நடந்தால் போதாது. இந்தியா முழுவதும் பரவலாக, நாடு தழுவிய போராட்டமாக அமைய வேண்டும், அனைத்து மக்களின் தன்னலமற்ற சேவை நாட்டுக்குத் தேவை என்று சுட்டிக்காட்டினார் பாரதியார்.
(வாழ்க திலகன் நாமம் - 3) (தோணி - படகு, சூழ்ச்சி - உபாயம், திட்டம்) என்றும்,
(திலகர் முனிவர் கோன் - 3) என்றும் புகழ்ந்து பாடுகிறார் பாரதியார். (அஞ்செழுத்து - ‘சிவனை வணங்குகிறேன்’ என்ற
பொருள்
(வ.உ.சி. க்கு வாழ்த்து - 2) (வருந்தலை= வருந்தாதீர், கேண்மை = நட்பு, உறவு, கோ = தலைவன்) என்று பாரதியார் பாடிய பாடல், இந்தியா விடுதலை அடையும் நாள் அண்மையில் உள்ளது என்று அவருக்கு ஆறுதல் கூறுவது போல் உள்ளது. கேளாத கதை என்று அவர் கூறுவது ‘இந்தியா பெறப் போகும் விடுதலை’ என்பது குறிப்பிடத்தக்கது. இங்ஙனம் நாட்டில் உள்ள நல்ல தலைவர்களைப் பற்றிப் பாடினார் பாரதியார். இத்தகைய தலைவர்களின் கீழ் போராடினால் விடுதலை நிச்சயம் கிட்டும் என்ற உணர்வை மக்களிடையே உருவாக்க இடைவிடாமல் முயற்சி செய்தார் பாரதியார். மேலும், "பாரதியார் தூத்துக்குடிக் கம்பெனி (வ.உ.சி. அவர்கள் துவக்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி) நமது முதற் பெருந்தொழில் முயற்சி. இதைக் கைவிட்டு விட்டால் நம்மைப் பிறகு உலகத்தில் யாரும் நம்பவே மாட்டார்கள் அரைக் காசாக இருந்தாலும் சரி, அதை அனுப்பி நமது மாதாவின் மானத்தைப் பாதுகாக்க வேண்டும்" என்று கூறினார். தாய் நாட்டுக்காக நடத்தும் இயக்கத்திற்குத் தாராளமாக நிதி உதவி செய்ய முன் வருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். |