பாரதியாரின் பார்வை தம் நாடு, தம் மக்கள் என்று குறுகி இருக்கவில்லை. எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் விடுதலை வேண்டும் என்ற உலகளாவிய நோக்கம் கொண்டதாக இருந்தது.
2.7.1 பெல்ஜியம்
பெல்ஜியத்தை வீழ்த்திய ஜெர்மனி இந்திய வீரர்களிடம் அனுதாபம்
உடையதாக இருந்தது. இந்தியாவிலிருந்த தேசபக்தர்களிலே பெரும்பாலோர் ஜெர்மனியின்
வெற்றியையே விரும்பினர். இந்த நேரத்தில்தான் ஜெர்மனியால் வீழ்த்தப்பட்ட பெல்ஜியத்திற்கு
வாழ்த்துக் கூறியிருக்கிறார் பாரதியார். இந்த இடத்திலே பாரதியாரின் தேசாபிமானத்தையும்
வென்று நிற்கிறது மனிதாபிமானம்.
(பெல்ஜியத்திற்கு வாழ்த்து - 1,9) (துளக்கற = மனக்கலக்கம் இல்லாமல்) என்று பாடுகிறார் பாரதியார். ஜெர்மனிய நாட்டுக்கு ஐரோப்பா கண்டம் ஆதரவளித்தாலும் மிகுந்த மனிதாபிமானத்தோடு பெல்ஜிய நாட்டு மக்களைப் பார்த்து, அவர் பாடுவது அவருடைய மனித நேயத்தைக் காட்டுகிறது. ஐப்பானிய யுத்தத்தின் ஆரம்ப முதலாகவே உருஷ்யாவில் உள்நாட்டுக்
குழப்பம் தொடங்கி விட்டது. அது முதல் புரட்சிக் கட்சியாருக்குப் பலம் அதிகரித்துக்
கொண்டு வந்தது. நமது உருசியத் தோழர்கள் செய்து வரும் உத்தமமான முயற்சிகளின்
மீது கடவுள் பேரருள் செலுத்துவாராக என்று உருசியா நாடு புரட்சியில் வெற்றியடைந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறார். அதை நினைத்து ஆனந்தமாகப் பாடிக் களிக்கிறார். இப்பாடல் சுதந்திரம் கிடைக்குமா என்று அவநம்பிக்கை கொள்ளும் இந்தியர் மனத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது. இந்திய மக்கள் அனைவரும் தம் வேற்றுமை மறந்து ஒன்று பட்டு நின்றால் உருசியா கண்ட யுகப் புரட்சியை இங்கும் காண முடியும். ஆங்கில ஆட்சியை வீழ்த்த முடியும். மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியும் என்று எண்ணினார். சமூக மாற்றத்திற்கும் இறையருள் தேவை என்று கருதிய பாரதியார்,
(புதிய உருசியா - 1) என்ற பாடல் உணர்த்துகிறது. சர்வாதிகாரிகள், ஏகாதிபத்திய அரசுகள் தங்களை யாரும் வீழ்த்த முடியாது என்றெண்ணுகின்றனர். அவர்களையும் புரட்சியால் வீழ்த்த முடியும் என்பதை உருசிய புரட்சி தெரிவிக்கிறது. எனவே இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்து விட்டான் ஜார் அரசன் (உருசியா - 5) என்று பாரதி பாடுகிறார். இதுபோல் ஆங்கில ஆட்சியையும் ஒழிக்க முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். |