விநாயகர் எத்தகையவர்? அவர் சொல்லுக்கு அரியர், சூழ்ச்சிக்கு அரியர், பல உருவாகப் படர்ந்த வான்பொருள், உலகம் காக்கும் சக்தி, ஓம் எனும் பொருளை உள்ளத்தில் நிறுத்திச் சக்தியைக் காப்பவர், எளியவர் (விநாயகர் நான்மணிமாலை - 2) என்றெல்லாம் விநாயகரை அனைத்துமாய்ப் பார்க்கிறார் பாரதியார். விநாயகர் உருவத்திலேயே வைதிகச் சமய கடவுள்களான முருகன், நாராயணன், சிவபெருமான் முதலிய தெய்வங்களை மட்டுமன்றிப் பிறசமயத் தெய்வங்களான அல்லா, யெஹோவா (விநாயகர் நான்மணிமாலை - 8) ஆகியோரையும் காண்பதாய் பாடியிருப்பது, ஒன்றில் பல தெய்வங்களைக் காணும் பாரதியின் பொது நோக்கை, தனித்தன்மையைக் காட்டுகிறது. சக்தியிடம் எல்லாத் தெய்வங்களையும் பார்த்தது போல் விநாயகரிடமும் சிறு தெய்வம், பெருந்தெய்வம் முதலிய அனைவரையும் பார்க்கும் பண்பு பாரதியிடம் உள்ளது. இதை
என்னும் பாடல் விளக்குகிறது.
என்ற பாடல் தெரிவிக்கிறது. விநாயகர் நான்மணிமாலை பாடலின் இறுதியில் வெற்றிக்கும் வீரத்திற்கும்
வாழ்த்துக் கூறிப் பக்திக்கும், உண்மைக்கும், ஊக்கத்திற்கும் வரவேற்பு கூறுகிறார்
பாரதி. மனிதரிடம் உள்ள நல்ல குணங்களே தேவர்கள். யுகங்கள் நான்கு. அவை கிருத
யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பன. பாரதி வாழ்ந்த யுகம்
கலியுகம். கலியுகத்தின் தன்மையாக மறம் ஓங்கும், அறம் நீங்கும், கேடு விளையும்,
நீதி தூங்கும் என்று சான்றோர் எல்லாக் கவிஞர்களும் தாம் வாழ்ந்த - வாழும் கால நிலையை மட்டும்
பாடினார்கள். பாரதியோ அவர்களையும் மிஞ்சி ஒளிமயமான எதிர்கால யுகத்திற்காக
இப்போதே வேண்டுகிறார். யாரிடம் வேண்டுகிறார் ? கற்பக விநாயகரிடம். கற்பகமரம்
கேட்டவர்க்குக் கேட்டதைக் கொடுக்கும் தன்மை உடையது. இல்லை என்ற சொல்லுக்கு
அங்கு இடமில்லை. ஆகவே,
முருகனை அறிவுத் திருவுருவாக எண்ணிச் ‘சுருதிப் பொருளே வருக’, என்று அழைக்கிறார். முருகனை வேதம் உணர்த்திய குரு, தமிழ்ப் பாவலருக்கு அருள்பவன் என்றெல்லாம் பாடும் பாரதி, அவனை வணங்கினால் பராசக்தி வேண்டிய வரம் தருவாள் என்று முருகனிடம் ஆற்றுப்படுத்துகிறார்.(முருகன் பாட்டு - 2) மேலும், முருகனை நினைந்து உள்ளம் உருகப் பாடும் பாரதி,
(முருகன் பாட்டு 1-5) என்று அறிவைக் கோயிலாகவும் அருளைத் தாயாகவும் உருவகப் படுத்திப் பாடியிருப்பது பக்திச் சுவையுடன் இலக்கியச் சுவையும் கலந்து விளங்குவதைக் காட்டுகிறது.
கண்ணனிடம் மிகுந்த பக்தி கொண்டவர் பாரதியார். அவர் கண்ணனுடன்
இரண்டறக் கலக்க விரும்பியதைக் ‘கண்ணன் வரவு’ என்ற பாடல் வெளிப்படுத்துகிறது.
கண்ணன் தம் அறிவில் ஒளிர வேண்டும், உயிரின் அமுதாய்ப் பொழிய வேண்டும், கருவாய்த்
தன்னுள் வளர வேண்டும். தம் உயிரிலே கலக்க வேண்டும், இதயத்தில் அமர வேண்டும்
என்றெல்லாம் "தர்மம் நீங்கி அதர்மம் ஓங்கும் போது தர்மத்தை நிலை நாட்ட
அவதரிப்பேன்" என்று பகவத்கீதையில் கூறியதை எதிரொலிப்பது தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா! (கண்ணன் வரவு -3) என்ற பாடல் அடி சிவபெருமானையும் கண்ணனையும் ஒன்றாகப் பாரதி பார்ப்பதைக் காட்டுகிறது. பாரதியாருக்குத் தெய்வபக்தி என்றால் காளி வழிபாடுதான் என்பதல்ல. காளி, கண்ணன், முருகன் ஆகியோர்ரையும் வழிபட்டார். ஆயினும் உள்பொருள் ஒன்றே என்று அவர் நினைத்தது தெரிகிறது. பாரதியாரின் பக்தி கோவிந்தன் பாட்டில் விரிந்து நிற்கிறது.
காற்று, வான், பறவை, முகில், மண் போன்ற பலவற்றிலும் கடவுளைக் காணத் துடிக்கும்
பாரதி அவருடன் சேரத் துடிக்கிறார். இறைவனும் (பரமாத்மா) உயிரும் (ஜீவாத்மா)
வேறுவேறாய் நிற்க இயலாது. நிற்கக் கூடாது. இரண்டும் கண்ணம்மா கண்ணனைப் பாரதியார் கண்ணம்மாவாகப் (பெண்ணாக) பார்த்துக் காதலில் கரைகிறார். இப்பாடல் காதலுக்கு ஓர் இலக்கணமாய் விளங்குகிறது. பெரும்பாலும் தமிழ் இலக்கியத்தில் கடவுளைக் காதலனாகப் பாவித்துப் பாடும் நாயகன் நாயகி - பாவமே காணப்படுகிறது. திருநாவுக்கரசர்,
(தேவாரம் : 6501) என்னும் பாடலில் தம்மைப் பெண்ணாகவும் சிவபெருமானை ஆணாகவும்
பாவித்துப் பாடுகிறார். இது போல் ஆழ்வார்களும் பாடியிருக்கிறார்கள். ஆனால்
பாரதி தம்மை ஆணாகவும் கண்ணனைக் கண்ணம்மா என்ற பெண்ணாகவும் பாவித்து மரபை
மாற்றிப் பாடிய நிலையைக் கண்ணம்மாவின் காதல், கண்ணம்மாவின் நினைப்பு
ஆகிய பாடல்கள் கண்ணம்மாவைக் கண்ணன் திருமார்பில் இருக்கும் திருமகளாய், சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் பார்வதியாய்ப் பார்க்கிறார்.
(கண்ணம்மா - 1) இவ்வாறு ஒன்றில் பலரை நோக்கும் பாங்கு, மனநிலை பாரதியின் கண்ணன் அவதாரத்தில் கண்ணன் ஆயர்பாடியில் குழந்தைகளோடு குழந்தையாய்
வளர்ந்து வந்த காரணத்தால் பாரதி அவரைத் தந்தையாய், தாயாய், நண்பனாய், சேவகனாய்,
காதலனாய், தெய்வமாய்க் காண்கிறார். பாரதியின் காலத்திற்கு அந்தச் சொல்லுக்குத்
‘தொண்டன்’ என்று புதுப்பொருள் தருகிறார். இராமபிரான் சக்கரவர்த்தித் திருமகன்,
ஆகவே, கண்ணம்மாவின் அங்க வர்ணனைப் பாடல் புதுக்கவிதை அமைப்பில் எளிமையாக உள்ளது. புதுக்கவிதைக்கு வித்திட்டவர் பாரதி. சொற்களைக் கையாளும் வித்தைப் பாரதிக்கே உரிய சொத்து என்பதை,
(கண்ணம்மா - அங்கவர்ணனை - பல்லவி) என்ற பாடல் அடிகள் உணர்த்துகின்றன. |