பாடம் - 4

C01124  பாரதியாரின் படைப்புகளில் அறிவியல் நோக்கு

 

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

பாரதியார் அறிவியல் கல்வி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆரம்பப் பள்ளிப் பாடத்திலேயே மாணவர்களுக்கு அறிவியல் பாடம் கற்றுக் கொடுப்பது மிக அவசியம் என்று கருதினார். ஆகையால் தேசியக் கல்விப் பாடத்திட்டத்தில் புவியியல், அறிவியல், உடற்கல்வி முதலியன சேர்க்கப்பட வேண்டும் என்று விரும்பினார். பாரதியாரின் அறிவியல் சிந்தனைகள் அவர் தம் பாடல்களிலும் கட்டுரைகளிலும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. அவற்றையே இப்பாடம் விரிவாகச் சொல்கிறது.



இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  •  

பாரதியார் ஐரோப்பிய நாட்டுக்கு இணையாக இந்தியமக்கள் அறிவியல் அறிவு பெற வேண்டும் என்று நினைத்ததை விளக்க இயலும்.

  •  

காற்று, கடல், கோள் இவை பற்றிய தம் படைப்புகளில் பாரதியார் அறிவியல் செய்திகளைக் கையாண்டிருக்கும் திறம் பாராட்ட இயலும்.

 

பாட அமைப்ப