ஆண், பெண் என்ற இருபால்களும் உலக வாழ்வின் இயக்கத்திற்கு இன்றியமையாதன. ஆணும் பெண்ணும் சேர்ந்து
வாழும் வாழ்வின் நிறைவிலேயே வையம் சிறக்கின்றது. வண்டிக்கு இருபுறம்
அமைந்த சக்கரங்கள்; மனித உடம்பிற்கு இரண்டு கால்கள்; வானவெளிக்குக்
கதிர் நிலவு என இரண்டு சுடர்கள், இப்படிச் சமமாக அமைந்த இரட்டைப் பொருள்களாக
வாழ்க்கைக்கு ஆண் பெண் அமைகின்றனர். ஆனால் உலகம் காலகாலமாகப் பெண்ணை
ஆணுக்குச் சமமாக நடத்தியதா? இல்லை. ஆணாதிக்கப் பிடியில் பெண் உரிமை
இழந்தாள். சமைப்பது, பிள்ளை பெறுவது என்பனவே அவள் கடமைகள். கணவனின்
கொடுமைகளையெல்லாம் அவள் தாங்கினாள். பெண் சித்திரவதைப்பட்டாள்; ஆமையாய்,
ஊமையாய் வாழ்ந்தாள்.
|