5.0 பாட முன்னுரை  
 

பாவேந்தர் பாரதிதாசன் குடும்பம் பற்றிய சிந்தனைக்குச் சிறப்பிடத்தைத் தமது பாடல்களில் கொடுத்துள்ளார். அதனால்தான் குடும்ப விளக்கு என்னும் நூலை ஐந்து பகுதிகளாகப் படைத்துள்ளார். ஒருநாள் நிகழ்ச்சி, விருந்தோம்பல், திருமணம், மக்கட்பேறு, முதியோர் காதல் என்று அந்த ஐந்து பகுதிகளுக்கும் தலைப்பிட்டுள்ளார். ஒரு குடும்பத்தில் நிகழும் அனைத்தையும் இவற்றுள் அவர் தொகுத்துப் பாடியுள்ளார்.

காலை முதல் இரவு வரை ஒரு வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளின் மையமாகத் தலைவி விளங்குகிறாள். அவள் தனது ஒவ்வொரு கடமையையும் சரியாகச் செய்து குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுகிறாள். கணவனுக்கு ஏற்றபடியும் குழந்தைகளுக்கு ஏற்றபடியும் நடந்து கொள்கிறாள் என்பதைப் பாரதிதாசன் அழகாகப் பாடியுள்ளார்.