தன் மதிப்பீடு: விடைகள் - I  
 

2. பெண்ணின் அதிகாலைச் சுறுசுறுப்புப் பற்றி நீவிர் அறிவது என்ன?

காலை முதல் மாலை வரை பெண் சுறுசுறுப்பாக இருப்பவள். அதிகாலையில் எழுந்ததும் பலரிடம் சோம்பல் காணப்படும். அந்தச் சோம்பல், குடும்ப விளக்கில் இடம்பெறும் தலைவியிடம் காணப்பெறவில்லை. தூங்கும்போது தலைவியுடன் தூங்கியிருந்த ஊக்கமும் சுறுசுறுப்பும் அவள் எழுந்ததும் இருகை வீசி எழுந்தன என்பதை அறிய முடிகிறது.