2.
மலையின் மூலம் அவர் வெளியிடும் சமுதாயக் கருத்து
யாது?
பாரதிதாசன், எந்த ஒரு பொருளைப் பற்றிப் பாடினாலும். அதில்
தனது சமுதாயச் சிந்தனையை வெளிப்படுத்தாமல் இருக்கமாட்டார்.
மலையின் அழகைப் பற்றிப் பாடும் பொழுதும் அத்தன்மையை
வெளிப்படுத்துகிறார். தம் வாழ்க்கையில் எந்தவித விடிவும்
இல்லாமல் வருந்தும் அடிமையின் உள்ளத்தில் பலவிதமான
துன்பங்கள் மிகுந்து இருக்கும். அவற்றால் வேதனைப்படும்
உள்ளத்திலிருந்து வெளிப்படும் உள்ளப் புகைச்சல் போன்று மலை
குவிந்து காட்சி அளிக்கிறது என்கிறார் பாரதிதாசன்.
|