பாவேந்தர்
பாரதிதாசன் தமது கருத்துகளை வெளியிடுவதற்குப் பல
இலக்கிய வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளார். அவர் மிகுதியாகப்
பயன்படுத்தியுள்ள இலக்கிய வடிவம் காப்பியம் ஆகும். பாரதிதாசன்
ஒரு கவிஞர் என்பதால், கவிதை வடிவில் கருத்தைத் தெரிவிக்கும்
காப்பியத்தை மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளார்.
அந்தக்
காப்பியங்களின் வழியாகத் தமது சிந்தனைகளைப் பாரதிதாசன்
வெளிப்படுத்தியுள்ளார்.
|