2.
இரண்டு மூலிகைகளின் அற்புதங்களாகப் பாரதிதாசன்
தெரிவித்திருப்பன யாவை?
சஞ்சீவி
பர்வதத்தின் சாரல் என்னும் காப்பியத்தில் பாரதிதாசன்
இரண்டு அற்புத மூலிகைகளைக் கற்பனை செய்து தெரிவித்துள்ளார்.
•
ஒரு மூலிகையைத் தின்றால் உலகில் உள்ளோர் பேசுவது நமது
காதில் நன்றாகக் கேட்கும்.
• இன்னொரு மூலிகையைத் தின்றால் இந்த உலகில் நிகழும்
நிகழ்ச்சிகள் எல்லாம் கண்ணுக்கு எதிரே தெரியும்.
|