5.8
பாவேந்தரின் நாடக நடை
|
E
|
நாடகங்கள்
உரையாடலாலும் உணர்வூட்டும் நடிப்பாலும்
சிறப்பைப்பெறும். நடிப்புக்கு அடிப்படை, உணர்வை உள்ளடக்கிய
உரையாடல்கள் ஆகும். எனவே நாடகம், உரையாடல் திறத்தால்
சிறப்பைப் பெறும் எனலாம்.
|
5.8.1
சிறுசிறு தொடர்கள்
|
நாடக
உரையாடல்கள் சிறு தொடர்களைக் கொண்டிருந்தால்
காட்சியில் விறுவிறுப்புக் கூடும். பாவேந்தர் பாரதிதாசனின்
‘கழைக்கூத்தியின் காதல்’ என்னும் நாடகத்தில் வரும் உரையாடல்
சிறு தொடர்களில் அமைந்திருப்பதைக் காணலாம்.
|
வள்ளி |
:
|
இதென்ன!
எனக்கு அச்சமாயிருக்கிறது! |
பொன்னி |
: |
பேயா
இருக்குமோ? |
முள்ளி |
: |
காணோமே
ஒன்றையும்! |
வள்ளி |
: |
பேய்
கண்ணுக்கா தெரியும்? |
முள்ளி |
: |
பின் எதற்குத்
தெரியும்? |
வள்ளி |
: |
அதன்
ஓசைதான் காதில் கேட்கும் |
முள்ளி |
: |
நம் குரல்
அதற்குக் கேட்குமா? |
வள்ளி |
: |
கேட்கும் |
முள்ளி |
: |
அப்படியானால்
கூப்பிடு. எங்கே
முத்துநகை என்று கேட்டுப்பார்க்கலாம். |
பொன்னி
|
: |
நீ
தான் கூப்பிட்டுக் கேள். நாங்கள்
வீட்டுக்கு ஓடிவிடுகிறோம். |
முள்ளி |
: |
பேயே! |
|
(கழைக்கூத்தியின்
காதல், காட்சி : 3)
|
இவ்வாறு அந்த உரையாடல் தொடர்ந்து செல்கிறது. பேய் என்னும்
அச்சத்தால் இருப்பவர்களால் பெரிய தொடர்களைப் பேச இயலாது.
அதற்கு ஏற்பவே பாரதிதாசன் இங்கே சிறு
தொடர்களைப்
பயன்படுத்தியுள்ளார்.
|
5.8.2 உரைநடையில்
உணர்வு
|
பிறப்பில்
உயர்வு தாழ்வு உண்டு என்னும் எண்ணம் கொண்ட
மன்னனின் மனத்தை மாற்றுவது போல் ஒரு காட்சி
‘கழைக்
கூத்தியின் காதல்’ என்னும் நாடகத்தில் இடம் பெற்றுள்ளது.
முத்துநகை என்பவள் ஆண்டியப்பன் என்னும் ஆண் வேடத்தில்
அரசனிடம் உரையாடுகிறாள்.
|
அரசன்
|
:
|
இப்படி
என்னைக் கட்டிக் கொண்டு வந்தவர் யார்
ஐயா?
|
ஆண்டியப்பன்
|
:
|
சிவபெருமான்
|
அரசன்
|
:
|
கடவுளுக்குப்
பேர் உண்டா? செயல் உண்டா?
ஆட்களை அனுப்பி என்னைக் கட்டி இங்குக்
கொண்டு வந்தது கடவுளா?
|
ஆண்டி
|
:
|
கடவுள்
வராது. நீங்கள் முற்பிறப்பில் செய்த
தீவினையின் செயல்.
|
அரசன்
|
:
|
முற்பிறப்பு
உண்டா இல்லையா என்பது முடிவு
பெறாத செய்தி. தீவினைத் தொடர்பு நம்பத்தகாத
ஒன்று.
|
ஆண்டி |
:
|
நீங்கள்
முற்பிறப்பில் செய்த வினைக்கு ஈடாக
இன்ன பிறப்பில் இன்ன நாளில் இன்னபடி நடக்கும் என்றும் உங்கள் தலையில்
எழுதி
வைத்திருக்கும். ஏன் இதை மறுக்கிறீர்கள்?
|
அரசர்
|
:
|
இவை எல்லாம்
ஆரியர் மூடக் கொள்கைகள்
|
ஆண்டி
|
:
|
உலகில்
மக்களின் ஏற்றத் தாழ்வு நிலைக்குக்
காரணம் என்ன?
|
அரசன்
|
: |
அதுவா. . .
. ?
|
ஆண்டி
|
: |
கேள்வி
விளங்கவில்லையா? நீங்கள் அரசர், நான்
அடிமை. நீங்கள் செல்வர், நான் ஏழை. இந்த
வேறுபாட்டிற்குக் காரணம் என்ன என்று தான்
கேட்கிறேன்.
|
அரசன்
|
: |
அதுவா . .
. ?
|
ஆண்டி
|
: |
நீங்கள்
மேலான சாதி. என் போன்றோர் தாழ்
சாதி. காரணம்?
|
அரசன்
|
: |
காரணம் என்ன
என்று கேட்கிறாய். அதுவா . . . ?
|
ஆண்டி
|
: |
வள்ளலே உள்ளத்தை
மறைக்காதீர்கள்!
|
அரசன்
|
: |
உலக
மக்களின் ஏற்றத் தாழ்வு நிலைமைகளுக்குக்
காரணம் அவரவர்களின் அறிவு ஆற்றல்களே.
|
ஆண்டி
|
: |
தெளிவான கருத்து.
சாதியில்லை அல்லவா?
|
அரசன்
|
: |
இல்லை
|
ஆண்டி
|
:
|
மக்கள் யாவரும்
நிகரா?
|
அரசன்
|
: |
ஒரே நிகர்
|
|
(கழைக்கூத்தியின்
காதல், காட்சி : 15)
|
மேற்காணும் உரையாடலில் பாரதிதாசன் தமது கொள்கையான
‘சாதி இல்லை, மக்களில் உயர்வு தாழ்வு இல்லை’
என்னும்
கருத்தை வெளிப்படுத்தியுள்ளதை நாம் காண முடிகிறது.
|