மூதுரையும் நல்வழியும் உணர்த்தும்
அறக்கருத்துகளை
இப்பாடம் தெரிவிக்கிறது. கல்வியின்
சிறப்பு, கல்வி
அறிவின்மையின் இழிவு, சான்றோர் பெருமை, உதவும்
மனப்பான்மையின் உயர்வு, செல்வத்தின் நிலை முதலியவை
விளக்கப்படுகின்றன.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
மூதுரை, நல்வழி ஆகிய நூல்களின் அமைப்பை அறிந்து கொள்ள முடியும்.
மன்னனை விடவும் கல்வி
அறிவு பெற்றவன்
மதிக்கப்படுவான் என்பதை உணர முடியும்.
சான்றோர் பெருமையை அறிந்து கொள்ளலாம்.
உதவி செய்வதால் ஏற்படும் இன்பத்தை அறியலாம்.
நல்ல நட்பை அடையாளம் காணலாம்.
செல்வத்தின் சிறப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்து கொள்ளலாம்.
வரவுக்கேற்ற செலவு செய்வதன் சிறப்பை அறியலாம்.
இனிமையான சொற்களைப் பேசுவதால் ஏற்படும் பயனை
உணரலாம்.