3.0 பாட முன்னுரை

தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று குறவஞ்சி ஆகும். இது இலக்கிய நயம் மிகுந்தது. நாடகப் போக்கு உடையது. இசைச் சிறப்பு உடையது. நாட்டுப்புற இலக்கியக் கூறுகளைக் கொண்டது. இனி, குறவஞ்சி இலக்கியம் பற்றிக் காண்போமா?

நண்பர்களே! இந்தப் பாடம் குறவஞ்சி என்ற இலக்கிய வகையின் பொதுத் தன்மைகளை அறிமுகப்படுத்துகிறது. மேலும் திருக்குற்றாலக் குறவஞ்சியைச் சிறப்பு நிலையில் விளக்குகிறது.