ஆழ்வார் வரலாறு
பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப்
பசுங்கொண்டல் என்னும்
தொடர் திருமழிசை ஆழ்வார்
வரலாற்றைக் குறிப்பிடுகின்றது.
திருமழிசை ஆழ்வாரின் பாடலுக்கு ஏற்ப அவர் பின்னால்
திருமால் சென்றார் என்னும் பொருள் கொண்டது. கிழவி
ஒருத்தியை ஆழ்வார்
இளம் பெண்ணாக மாற்றினார். இதனை
அறிந்தான் பல்லவ
மன்னன். ஆழ்வாரின் மாணவன்
கணிகண்ணன் மூலம் தன்னையும் இளம் பருவத்தினனாக
ஆக்குமாறு ஆழ்வாரை வேண்டினான். கணிகண்ணன்
மறுத்தான். இதனால் மன்னன் அவனை நாடு
கடத்தினான்.
இச்செய்தி அறிந்ததும் ஆழ்வார்,
|
கணிகண்ணன் போகின்றான் காமரு
பூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய செந்நாப் புலவன் யான் செல்கின்றேன் நீயும் உன்தன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் |
|
(கச்சி = காஞ்சி, பைந்நாகப்பாய் = பாம்புப் படுக்கை)
என்று பாடுகின்றார். உடனே திருமாலும் காஞ்சிபுரத்தை
விட்டு
அகன்றார். தமிழ்ப் புலவருக்காகத் திருமால் இவ்வாறு
செய்ததையே பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப்
பசுங்கொண்டல் என்று பிள்ளைத்தமிழ் குறிப்பிட்டுள்ளது.
2.6.2 அன்பின் ஐந்திணை
தமிழ்க்கடலின் அன்பின் ஐந்திணை எனத் தொடங்குவது
இறையனார் அகப்பொருள் என்னும் இலக்கண நூலாகும்.
இந்த அகப்பொருளின் தெளிந்த
அமுதமாகிய கூட்டினை
உண்பவள் கலைமகள் என்ற செய்தியைப்
பிள்ளைத்தமிழ் சுட்டி
உள்ளது.
| தெள்ளித் தெளிக்கும்
தமிழ்க்கடலின் அன்பின்ஐந் திணைஎன எடுத்த இறைநூல் தெள்அமுது கூட்டுஉணும் (மீனா.பிள். 9) |
(இறைநூல் = இறையனார் அகப்பொருள், இலக்கணநூல்)
எனும் பாடல் அடிகள் மேல் கருத்தை விவரிக்கும். தமிழ்
பற்றிய குறிப்புகளைப் பல்வேறு இடங்களில் குமரகுருபரர்
குறிப்பிட்டுள்ளார்.
![]() |
இவ்வாறாகத் தமிழ் சிறந்த
அடைமொழிகளுடன் போற்றப்
பெற்றுள்ளதை அறிய
முடிகின்றது.