பிள்ளைத்தமிழ் இலக்கியம் சிற்றிலக்கிய வகைகளுள்
ஒன்று. முதலில் பிள்ளைத் தமிழ் பற்றிய பொது
அறிமுகத்தைக் கூறி, அதன்பின் அதன் பத்துப் பருவங்களையும் விளக்குகிறது இப்பாடம்.
முருகன்
அருள் பெற்ற குமரகுருபர் இயற்றிய மீனாட்சியம்மை
பிள்ளைத்தமிழ் இப்பாடத்தில் விளக்கப்படுகிறது.
நூலின்
அமைப்பைப் பேசிய
பின், மீனாட்சியின் பெருமைகள்
பத்துப் பருவங்கள்
வாயிலாகச் சுவையோடு
தரப்படுகின்றன. தமிழின் தனிச் சிறப்புகளும் இதில்
விளக்கப்படுகின்றன.
மீனாட்சியம்மையின் பேரருளுக்கு
உரியவரான குமரகுருபரரின் சிறப்பும் இடம் பெறுகிறது.
|