5.1 உயிர்மெய் எழுத்துகளின் நிலை

தமிழில் உள்ள எழுத்துகளை முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் என வகைப்படுத்தலாம் என முந்தைய பாடங்களில் பார்த்தோம். உயிர் எழுத்து, மெய் எழுத்து ஆகிய முதல் எழுத்துகளும், சார்பு எழுத்துகளில் உயிர்மெய் எழுத்துகளும் சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும் தன்மையை இந்தப் பாடம் வரையறுத்துச் சொல்கிறது.

உயிர் எழுத்து, மெய் எழுத்து என்று முதல் எழுத்துகள் இரு வகைப்படும்.

அவற்றில் உயிர் எழுத்துகள் சொல்லுக்கு முதலில் வரும். மெய் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வரும். உயிர் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை. மெய் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் வருவது இல்லை. வல்லின எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை.

எடுத்துக்காட்டு

சொல்லின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து வருதல்.

ம்மா
றும்பு

சொல்லுக்கு இறுதியில் மெய் எழுத்து வருதல்.

மணல்
முள்
ண்

உயிர்மெய் எழுத்துகள் சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும்.

சொல்லுக்கு முதலில் உயிர்மெய் எழுத்து வருதல்.

ல்
ண்
ரம்
நி
ழல்

சொல்லுக்கு இறுதியில் உயிர்மெய் எழுத்து வருதல்.

லி
அப்பா
உணவு
ஒற்றுமை

உயிர் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் சேர்ந்து உண்டாவதே உயிர்மெய் எழுத்து என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் உயிர்மெய் எழுத்துகளில் மெய் எழுத்துகள் முன்னும் உயிர் எழுத்துகள் பின்னும் அமைந்துள்ளன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துகளைப் பற்றிப் பார்க்கும்போது உயிர்மெய் எழுத்துகளை மெய்+உயிர் என்று தனித்தனியே பிரித்துவிட வேண்டும். அவ்வாறு பிரித்துவிட்டால் சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் உயிர்எழுத்து அல்லது மெய் எழுத்து ஆகிய இரண்டு மட்டுமே வரும் என்பது தெளிவாகிவிடும்.

மரம் என்ற சொல்லின் முதல் எழுத்து ம. இதைப் பிரித்துப் பார்த்தால் ம்+அ என்று வரும். மரம் என்ற சொல் ம் என்ற மெய் எழுத்தில் தொடங்கிய சொல் என்று கொள்ள வேண்டும்.

கிளி என்ற சொல்லின் இறுதி எழுத்து ளி என்பதாகும். இதைப் பிரித்துப் பார்த்தால் ள்+இ என்று வரும். கிளி என்ற சொல் என்ற உயிர் எழுத்தில் முடிகின்ற சொல் என்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரித்துப் பார்க்கும் போது எல்லா எழுத்துகளையும் உயிர் எழுத்து அல்லது மெய் எழுத்து என்ற பகுப்புக்குள் கொண்டு வந்து விடலாம். ஒருசொல் உயிர் எழுத்திலோ அல்லது மெய் எழுத்திலோ தான் தொடங்குகிறது என்று கூறிவிட இயலும். அதே போல ஒரு சொல் உயிர் எழுத்திலோ அல்லது மெய் எழுத்திலோ தான் முடிகிறது என்றும் கூறிவிட இயலும்.

சொல் என்பது ஒரு பொருளைக் குறிப்பது. பல எழுத்துகளின் சேர்க்கை ஒரு சொல் ஆகிறது. ஒரே எழுத்தும் ஒரு பொருளைக் குறிக்கப் பயன்படும். அப்போது அந்த ஒற்றை எழுத்தும் ஒருசொல் ஆகிறது. நெடில் எழுத்துகள் மட்டுமே தனித்து ஒரு சொல்லாக வரும்.

தீ,  பூ,  வா,  போ

இவற்றை ஓர் எழுத்து ஒரு மொழி என்று கூறுவர். இந்தச் சொற்கள் எல்லாம் உயிர்மெய் எழுத்துகள் வரும் ஓர் எழுத்துச் சொற்கள். இவற்றைப் பிரித்துப் பார்க்கலாம்.

தீ
=
த்
+
பூ
=
ப்
+
வா
=
வ்
+
போ
=
ப்
+

மேலே பிரித்துக் காட்டியுள்ளதைக் கவனியுங்கள். இவற்றில் மெய் எழுத்து முன்னும், உயிர் எழுத்து பின்னும் அமைந்துள்ளன. எனவே இவற்றை மெய் எழுத்தில் தொடங்குகின்ற சொற்களாகவும், உயிர் எழுத்தில் முடிகின்ற சொற்களாகவும் கொள்ள வேண்டும்.

நின்ற நெறியே உயிர்மெய் முதல் ஈறே

(நன்னூல் -109)

(பொருள் : உயிர்மெய் எழுத்துகளில் மெய் எழுத்து முன்னும், உயிர் எழுத்து பின்னும் இருக்கும்.)

தனி உயிர் நெடில் எழுத்துகள் சொற்களாக அமைவதும் உண்டு.

எடுத்துக்காட்டு

ஆ (பசு)

ஏ (அம்பு)