4.3 நன்னூலார் கருத்து பதம் என்பதன் இலக்கணத்தை வரையறை செய்யும்போது, எழுத்துத் தனித்துப் பொருள் தரின் அல்லது தொடர்ந்து நின்று பொருள் தரின் அது ‘பதம்’ எனப்படும் என்று நன்னூல் விளக்கியதைக் கண்டோம். அவ்வாறு ஓர்எழுத்து ஒருமொழியாக அமையும் தமிழ் எழுத்துகள் எத்தனை என்பதை நன்னூல் பட்டியலிட்டுக் காட்டுகின்றது. அவற்றை,
என்னும் நூற்பாவின் (128) வழி நன்னூல் விளக்குகிறது. நன்னூல் மேற்காணும் நூற்பாவில் விளக்கும் செய்திகளைப் பின்வருமாறு பட்டியலிட்டுக் காணலாம்.
மேலே பட்டியலில் காட்டியபடி தமிழில் ஓர் எழுத்து ஒரு மொழியாக அமைவன 42 என்று நன்னூல் வகுத்துள்ளது. இப்போது இந்த 42 ஓர் எழுத்து ஒருமொழிகளும் உணர்த்தும் பொருள்களைக் காண்போம். இவற்றுள் பல சொற்களின் பொருள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சில சொற்களை நாம் பேச்சு வழக்கிலே பயன்படுத்துகிறோம். பேச்சு வழக்கில் இல்லாத இலக்கிய வழக்குச் சொற்களும் இதில் இடம் பெற்றுள்ளன. அவற்றின் பொருள்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். எனவே மேலே கண்ட 42 எழுத்துகளும் உணர்த்தும் பொருள்களையும் ஒவ்வொன்றாகக் காண்போம். இந்த 42 எழுத்துகளை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். அவை,
என்று அமையும். 4.3.2 ஓர்எழுத்து ஒருமொழியில் உயிர் எழுத்துகள் ஓர்எழுத்து ஒருமொழியாக வரும் உயிர்எழுத்துகள் ஆறும் நெடில்எழுத்துகள் என்பதை இங்கு மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவது நல்லது. தொல்காப்பியம் கூறும் ஓர்எழுத்து ஒருமொழிகள்பற்றி விளக்கும்போது, இவற்றின் பொருள்கள் எடுத்துக் கூறப்பட்டன. எனினும் நினைவில் நிற்க வேண்டி மீண்டும் அவற்றின் பொருள் இங்குச் சுட்டப்படுகின்றன.
4.3.3 ஓர்எழுத்து ஒருமொழியில் உயிர்மெய் எழுத்துகள் உயிர்மெய் நெடில் எழுத்துகளில், ம, த, ப, ந, க, வ, ச, ய என வரும் எட்டு வருக்கங்களில் வருபவை மட்டுமே ஓரெழுத்து ஒரு மொழிகள் ஆக வந்துள்ளன. ‘ம’ வருக்கத்தில் (6)
‘த’ வருக்கத்தில் (5) தா, தீ, தை இவற்றின் பொருளை நீங்கள் அறிவீர்கள்.
‘ப’ வருக்கத்தில் (5) பா, பூ, பே, பை, போ என வருவனவற்றில் பூ, பை, போ ஆகியவற்றின் பொருள் உங்களுக்குத் தெரியும்.
‘ந’ வருக்கத்தில் (5) நா, நீ, நே, நை, நோ இவற்றில் நா, நீ எனவரும் இரண்டு எழுத்துகள் உணர்த்தும் பொருள்களை நீங்கள் அறிவீர்கள்.
‘க’ வருக்கத்தில் (4) கா, கூ, கை, கோ. இவற்றில்
‘வ’ வருக்கத்தில் (4) வா, வீ, வை, வௌ இவற்றில் வா, வை எனவரும் இரு எழுத்துகளின் பொருளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
‘ச’ வருக்கத்தில் (4) சா, சீ, சே, சோ இவற்றில் சா என்பது இறத்தல் என்று பொருள்படும்.
‘ய’ வருக்கத்தில் (1) யா என்பது ஒருவகை மரம்.
நொ, து - ஆகிய உயிர்மெய்க் குறில் எழுத்துகள் இரண்டும் ஓர்எழுத்து ஒருமொழிகளாக அமைகின்றன. நொ என்பது ‘வருத்து’ அல்லது ‘துன்புறுத்து’ என்ற பொருளையும், து என்பது ‘உண்’ என்னும் பொருளையும் உணர்த்தும்.
|