5.1 பகாப்பதம்
இப்பாடத்தில் பகாப்பதம், பகுபதம்
ஆகியவற்றின் வகைளைக்
காண்போம். பகுபதத்தின் உறுப்புகள் பற்றியும்
அறிந்து
கொள்வோம்.
5.1.1
பகாப்பதத்தின் இலக்கணம்
பிரித்தால் பொருள் தராத பதமே பகாப்பதம்
ஆகும். அது
இடுகுறியாக வழங்கிவரும்; நெடுங்காலமாக ஒரே தன்மையுடையதாக
அமைந்திருக்கும். (இடுகுறி = காரணம் இன்றி இடப்பட்டு வழங்கி
வரும் சொல்).
எடுத்துக்காட்டு :
‘மழை பொழிகிறது‘ இந்த வாக்கியத்தில்
மழை, பொழிகிறது
என்ற இரு பதங்கள் (சொற்கள்) உள்ளன. பொழிகிறது என்பதை,
பொழி + கிறு + அது என்று பிரிக்கலாம். ‘பொழி‘ என்பதைப்
பிரிக்கமுடியாது. பொ, ழி எனப்பிரித்தால் இரண்டு எழுத்துகளுக்கும்
பொருள் இல்லை. அதே போல, ‘மழை‘ என்பதும் பிரித்தால்
பொருள் தராதது, ஆகவே ‘மழை‘ , ‘பொழி‘ ஆகிய இரண்டும்
பகாப்பதம் ஆகும்.
இப் பகாப்பதம் நான்கு வகைப்படும். அவை,
(1) |
பெயர்ப்பகாப்பதம் |
(2) |
வினைப் பகாப்பதம் |
(3) |
இடைப் பகாப்பதம் |
(4) |
உரிப் பகாப்பதம் |
ஆகியன.
5.1.2
பகாப்பதத்தின் வகைகள்
(1) பெயர்ப் பகாப்பதம்:
பெயர்ச் சொல்லாக அமையும் பகாப்பதம்
பெயர்ப் பகாப்பதம்
எனப்படும்.
எடுத்துக் காட்டுகள் :
நிலம்,
நீர், நெருப்பு, காற்று என வருவன.
(2)
வினைப் பகாப்பதம்:
வினைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள்
வினைப் பகாப்பதங்கள்
எனப்படும்.
எடுத்துக் காட்டுகள் :
நட, வா,
உண், தின் முதலியன.
(3) இடைப்பகாப்பதம் :
இடைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள்
இடைப் பகாப்பதம்
எனப்படும்.
எடுத்துக் காட்டுகள் :
மன்,
கொல், போல், மற்று என்பன.
(4) உரிப் பகாப்பதம் :
உரிச் சொற்களாக வரும் பகாப்பதம் உரிப் பகாப்பதம்
எனப்படும்.
எடுத்துக் காட்டுகள்
:
கூர், மிகு,
உறு, தவ, நனி, கழி,
மேலே சுட்டிய எடுத்துக் காட்டுகளில் கண்ட
பெயர், வினை, இடை,
உரிச் சொற்களைப் பிரித்தால் பொருள் தருவதில்லை;
அவை
இடுகுறியில், இட்டு வழங்கி வருகின்ற தன்மையில் அமைந்தவை
என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதனை நன்னூல்
பின்வருமாறு விளக்குகின்றது.
பகுப்பால்
பயனற்று இடுகுறியாகி
முன்னே ஒன்றாய் முடிந்தியல் கின்ற
பெயர் வினை இடை உரி நான்கும் பகாப்பதம் (131) |
|