5.4 ஒற்று இடையில் மிகும் குற்றியலுகரங்கள் முன் நாற்கணம் டு, று என முடியும் நெடில்தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களில் உள்ள ட, ற என்னும் வல்லின மெய்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணமும் (உயிர், வலி, மெலி, இடை) வந்து புணரும்பொழுது பெரும்பாலும் இரட்டிக்கும். நெடிலோடு உயிர்த்தொடர்க்
குற்றுகரங்களுள் (ஒற்று - மெய்; ட ற ஒற்று இரட்டும் - ட் என்பது ட்ட் எனவும், ற் என்பது ற்ற் எனவும் இரட்டிக்கும்; வேற்றுமை மிகவே - வேற்றுமைப் புணர்ச்சியில் பெரும்பாலும்) சான்று: நாடு + அரசன் = நாட்டரசன் இச்சான்றுகளில் டு, று என முடியும் நெடில்தொடர் முன் வேற்றுமையில் நாற்கணமும் வர, இறுதியில் உள்ள ட, ற என்னும் மெய்கள் இரட்டித்தன. பகடு + ஏர் = பகட்டேர் (பகடு - எருது, காளை; பகட்டேர் - காளை மாட்டைப் பூட்டிய ஏர்) இச்சான்றுகளில் டு, று என முடியும் உயிர்த்தொடர் முன் வேற்றுமையில் நாற்கணமும் வர, இறுதியில் உள்ள ட, ற என்னும் மெய்கள் இரட்டித்தன.
|