பாடம் - 3 |
C03113 தமிழ்நாடு - நில அமைப்பும் வரலாறும் |
தமிழ்நாடு இயற்கை வளம் மிகுந்த ஒரு நாடு. இது, நிலத்தின் இயற்கை அமைப்பிற்கு ஏற்ப மலைசார்ந்த இடம், காட்டைச் சார்ந்த இடம், வயலைச் சார்ந்த இடம், கடலைச் சார்ந்த இடம், வறண்ட பாலைவனம் போன்ற இடம் என்ற ஐந்து நிலப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. இந்த ஐந்து வகையான நிலப் பாகுபாட்டிற்கு ஏற்ப, தமிழர்கள் நிலம் சார்ந்த தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இலக்கியங்களையும் அவற்றின் அடிப்படையிலேயே படைத்தனர். இவை பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் இடம் பெறுகின்றன. தமிழ் இலக்கியங்கள், அகழ்வாய்வுகள், கல்வெட்டுகள், அயலகப் பயணிகள் குறித்துள்ள செய்திகள் ஆகியவை தமிழ்ப் பண்பாட்டு வரலாற்று மூலங்களாகத் திகழ்வதை இப்பாடம் எடுத்துரைக்கிறது. கோயில்கள் பண்பாட்டு மையங்களாக அமைந்திருப்பதையும் இந்தப் பாடம் கூறுகிறது. |
ஆகியவை பற்றிய தகவல்களை இப்பாடத்தைப் படிப்பதன் மூலம் பெறலாம் |