பாடம் - 6

C03116 பழங்காலத் தமிழ்ப் பண்பாடு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

c03110ad.gif (1294 bytes)

மூன்று சங்கங்கள் பற்றிய செய்திகளும், மன்னர்கள் தமிழ்ப் புலவர்களைப் போற்றிய பண்பும் கூறப்படுகின்றன.

அதன்பின்னர், சங்க இலக்கியங்கள் பற்றிய செய்தியும், அவைமூலம் வெளிப்படும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளும் எடுத்துக் காட்டுகளுடன் விளக்கப்படுகின்றன.

பழங்காலத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள சுவைமிக்க நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டி, அவை எவ்வாறு தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளாகத் திகழ்கின்றன என்பவையும் இந்தப் பாடத்தில் எடுத்துரைக்கப்படுகின்றன.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழக வரலாற்றில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாட்டுநிலை, பண்பாட்டு நிலைகள் அறியக் கிடைக்கின்றன.

  • இவற்றைத் தெரிவிக்கும் சான்றுகளாகப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற பதினெட்டு நூல்கள் இன்று நமக்குக் கிடைத்திருக்கின்றன.

  • தமிழர் வாழ்வு நெறி, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், விழுமியங்கள், வரலாற்று நிகழ்ச்சிகள் போன்ற தகவல்கள் இந்நூல்களில் கிடைக்கின்றன.

இத்தகவல்களை இந்தப் பாடத்தின் வழியாக நீங்கள் அறியலாம்

பாட அமைப்பு