தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

இசுலாமும் இந்து சமயமும் நல்லிணக்கமாய் வாழ்ந்த நிலையைக் காட்டுக.

கோட்டாற்றுச் செய்குத்தம்பிப் பாவலர் இராமாயண மகாபாரதங்களைக் கற்றவர். கல்வத்து நாயகம் வெள்ளிக்கிழமைத் தொழுகையைத் தமிழில் நடத்துவதே பொருத்தம் என்றார். திருமால் துருக்க நாச்சியாரை மணந்து கொண்ட கதை, நாகூரில் இந்துக்கள் நேர்த்திக் கடன் செலுத்துவது, பள்ளிவாசல் கட்டத் தமிழக வேந்தர்கள் உதவி செய்தமை ஆகியன இந்து இசுலாமிய நல்லிணக்கம் காட்டுவன.