தன் மதிப்பீடு : விடைகள் - I

1. சிற்றிலக்கியம் என்பது யாது?

அறம், பொருள், இன்பம்,வீடு என்ற குறிக்கோள்களைப் பற்றியனவாக இல்லாமல் மன்னர்கள், தெய்வங்கள், வள்ளல்கள் மீது புகழ்ச்சியாகப் பாடப் பெற்றது சிற்றிலக்கியம். கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், பிள்ளைத் தமிழ், தூது, பரணி, பள்ளு, மாலை என்பன அதன் வகைகள்.