இதுவரை, சேர சோழ பாண்டிய மன்னர்கள்
நாட்டை ஆண்ட
முறைகளுடன் பல்லவர், விசயநகர மன்னர்கள் நாட்டை ஆண்ட
முறைகளையும் அவர்கள் வாழ்க்கை முறைகளையும் அறிந்து
கொண்டீர்கள். அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், குலப்பெயர்கள்
என்னவென்று கூறப்பட்டன. மன்னர்களின் வெற்றிச்
சிறப்பு
மெய்க்கீர்த்தி என வழங்கப்பட்டது. அரசியர் கோயில் திருப்பணிகள்
செய்துள்ளனர். பெண் அதிகாரிகள் இருந்த செய்தி பெண்கள்
சமூகத்தில் ஏற்றம் பெற்று வாழ்ந்த நிலையைக் காட்டுகிறது.
நாடுகள், மண்டலங்களாக,
வளநாடுகளாக, நாடுகளாக,
ஊர்களாகப் பிரிக்கப்பட்டு நல்லாட்சி நடந்ததைக் காணமுடிகிறது.
குடஓலை முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வாரியத் தலைவர்கள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும்
என்பது வலியுறுத்தப்படுகிறது. வரிகள்
முறையாக
வசூலிக்கப்பட்டன. கல்வெட்டில் காணப்படும் கலைச் சொற்களும்
தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
|