பழங்கால மக்களின் வாழ்வியல்
முறையும், அக்காலச்
சமுதாய நிலையும் சிறப்புடன் இருந்தன. மக்களின்
பொறுப்பு, ஊர்க்கூட்டங்களில் மக்கள் ஏற்றுக்கொண்ட பங்கு
போன்றவையும் சிறப்பாக உள்ளன. அக்காலத்தில் சமுதாயத்தில்
பெண்களின் நிலை உயர்வாக இருந்தது.
வீரமரணம்
அடைந்தோருக்கு நல்ல மரியாதை இருந்தது சமூகத்தில் பல
வேறுபாடுகள் இருந்தாலும் சமூக உரிமைகள் இருந்தன. வழக்குகள்
விசாரிக்கப்பட்டுக் குற்றம் செய்தோருக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டன.
அடிமைமுறையும் இருந்தது. தண்ணீர்ப் பந்தல், சுமைதாங்கி
ஆகியவற்றை நிறுவிப் பிறர்க்கு உதவி புரிந்துள்ளனர்.
|