3.0 பாட முன்னுரை

இயல்பான இல்வாழ்க்கை இருவகைக் கைகோளுக்குள் அடங்குவதாகும். களவு, கற்பு என்பவையே இருவகைக் கைகோள்கள். கைகோள் என்ற சொல் ஒழுக்கம் என்ற பொருளைத் தரும். களவொழுக்கம், கற்பொழுக்கம் என்ற இரு பெரும்பிரிவுகளில் ஐங்குறுநூற்றுப் பாடல்களைக் காண்போம்.