பாடம் - 1
D01141 புறநானூறு - 1
|
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
|
|
தமிழ் இலக்கியங்களில் காலப் பழைமை மிக்கன சங்க இலக்கியங்கள். அவை பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும் எனப் பதினெட்டு நூல்களாகும். இப்பதினெட்டு நூல்களில் புறநானூறு, எட்டுத்தொகை நூல்களில் ஒன்று எனச் சொல்லுகின்றது. புறநானூற்றில் நானூறு செய்யுட்கள் இருக்க வேண்டும். ஆனால் 267, 268 ஆகிய இரு செய்யுட்கள் கிடைக்கவில்லை. சில செய்யுட்கள் இடையிலே சிதைந்துள்ளன என்பதைக் கூறுகின்றது. புறநானூற்றில் இணையம் வழங்கும் பாடப் பகுதியில் முப்பது செய்யுட்கள் இடம்பெறுகின்றன. அவற்றுள் புறநானூறு-1 என்னும் இப்பாடத்தில் 2, 9, 10, 30, 47, 50, 74 என்ற எண்ணுடைய ஏழு செய்யுட்களின் விளக்கம் கூறப் பெறுகின்றது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால்
என்ன பயன்
பெறலாம்?
|
|