பாடம் - 4
D01144 புறநானூறு - 4
|
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
|
|
புறநானூற்றின் நான்காவதான இப்பாடம், புறநானூற்றில் மேலும் எட்டுப் பாடல்களுக்குரிய (பாடல் எண் 226, 228, 229, 235, 239, 242, 243, 245) விளக்கங்களைத் தருகின்றது. இவ்வெட்டுப் பாடல்களும் துன்பச் சுவை காட்டுவன. இழப்பைக் குறித்து இரங்கிப் பாடப்பெற்றன. உடம்பு நிலையாமை, இளமை நிலையாமை போன்ற நிலையாமைகள் மனிதர் வாழ்வை எவ்வாறு பாதிக்கின்றன என்று இப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. பழந்தமிழ்ச் சமுதாயத்தில் புலவர்க்கும் அரசர்க்கும் இடையே நிலவிய அன்புப் பிணைப்பு, அரசர்க்கும் மக்களுக்கும் இடையே நிலவிய நேய இணைப்பு, கணவன் மனைவி வாழ்வில் இருந்த உறவுக் கலப்பு ஆகியவற்றை இப்பாடல்கள் சொல்லுகின்றன. |
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம் ?
|
|