ஐந்திணைகளுக்கும் உரிய மூன்று பொருள்களில் முதன்மையானது நிலம் ஆகும்.
நிலத்துடன், அந்த நிலத்துக்குரிய ‘பொழுது’ என்ற காலத்தையும் சேர்த்து ‘முதற்பொருள்’ என வழங்குவர். இதனை,
நிலமும் பொழுதும் என முதல் இரு வகைத்தே (8)
என்ற நம்பியகப் பொருள் நூற்பா இனிது விளக்கும்.
நிலம் என்பது முதற்பொருளின் பகுதி ; குறிஞ்சி முதலான 5 திணைகளுக்கும் உரிய நிலங்கள் எவை என்பதைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகிறது.
வரையே சுரமே புறவே பழனம் திரையே அவையவை சேர்தரும் இடனேஎனஈர் ஐவகைத்து அனையியல் நிலமே (9)
இவ்வாறு ஐந்து திணைகளுக்கும் ஐவகைப்பட்ட நிலங்களை வகுத்துள்ளனர்.
பொழுது என்பது காலத்தைக் குறிக்கும். அது சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும்.
இது ஒரு நாளின் சிறுபிரிவு:
எனச் சிறுபொழுது 5 பிரிவுகளை உடையது.
இது ஓர் ஆண்டின் உட்பிரிவு ஆகும்.
ஐந்து திணைகளுக்கும் உரிய சிறுபொழுது, பெரும்பொழுதுகள் எவையெவை என்பதைக் கீழ்வரும் அட்டவணை விளக்கும்.
பெரிதாக்குக