பிரிவுழி மகிழ்ச்சி, களவிற்குரிய கிளவித்தொகைகளுள் ஒன்று.
தலைவனும் தலைவியும் ஓரிடத்தில் களவு வழியில் கூடி
மகிழ்ந்தனர். அப்புணர்ச்சிக்குப்பின் அங்கிருந்து தலைவி
பிரிந்து செல்ல, அப்போது தலைவியோடு கூடிய
கூட்டத்தை எண்ணி, தலைவன் மனமகிழ்வுடன்
பேசுவது பிரிவுழி மகிழ்ச்சி எனப்படும்.
|