இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்? |
-
கந்தர்வம் பற்றிய விளக்கம் அறிந்து
அதனைக் களவு
என்பதுடன் இணைத்து உணரலாம்.
-
களவு மலர்வதற்கு முன்பாக நிகழும்
காட்சி, ஐயம்,
துணிவு, குறிப்பறிதல் முதலானவற்றைக் கைக்கிளையின்
படிநிலைகள் என உணரலாம்.
-
களவிற்குரிய 17 வகையான கிளவித் தொகைகள்
எவை
என அறியலாம்.
-
இயற்கைப் புணர்ச்சியின் இரு நிலைகளை
உணரலாம்.
-
வன்புறை, தெளிவு, பிரிவுழி மகிழ்ச்சி,
பிரிவுழிக் கலங்கல், இடந்தலைப்பாடு பற்றிய இலக்கண விளக்கங்களைக்
கற்று உணரலாம்.
-
பாங்கன் கூட்டம் அமையும் நிலைகளையும்,
அதன்
செய்திப் பிரிவுகளையும் உணர்ந்து தெளியலாம்.
|
|